முகாமையாளரின் கருத்துக்கு பதிலடி- நாளை இலங்கை போக்குவரத்து சேவைகள் முடக்கம்
நாளைய தினம் இலங்கை போக்குவரத்துச் சேவைகளில் ஈடுபடப் போவதில்லை என இலங்கை போக்குவரத்து வடமாகாண ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
வடமாகாண இலங்கை போக்குவரத்து சாலை முகாமையாளர் காலை பேரூந்துகளை அனுப்பி ஊழியர்களை ஏற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளதாக சற்று முன்னர் அறிவித்திருந்தார். ஆனால் அந்த 3 மணிக்கு கடமையாற்றும் உத்தியோகஸ்த்தரை யார் பேருந்தில் ஏற்றி வருவது. எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். எனவே நாளை இலங்கை போக்குவரத்து சேவைகள் முடக்கப்படும் எனத் தெரியவந்துள்ளது.