Fri. May 3rd, 2024

நெல்லியடியில் எரிபொருள் இன்று வழங்கப்பட மாட்டாது

கட்டைவேலி நெல்லியடி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று திங்கட்கிழமை  எரிபொருள் வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று எரிபொருள் வழங்கப்படும் என்ற தவறான தகவல் காரணமாக மக்கள் வரிசையில் காத்திருக்கிறார்கள். எரிபொருள் வழங்கப்படுவதற்கு முன்னர் அறிவிக்கப்படும். ஆனால் எவ்வித அறிவித்தலும் வழங்கப்படவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் காலை நெல்லியடி மத்திய கல்லூரியில் மதிப்பீட்டு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் எரிபொருள் பெற்றுத் தருமாறு கோரி போராட்டத்தை முன்னெடுத்தனர். குறித்த பிரதேசத்திற்கு வருகை தந்த நெல்லியடி பொலீஸ் பொறுப்பதிகாரி காஞ்சன விமலவீர இன்று எரிபொருள் வந்தால் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை வழங்கியமையையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்