இஸ்லாமிய பயங்கரவாதத்தை எதிர்த்துப் புலனாய்வு நடவடிக்கைகள்
உளவுத்துறை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதன் மூலம் மட்டுமே இஸ்லாமிய பயங்கரவாதத்தை அடக்க முடியும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (13) தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் நிலம், கடல் மற்றும் வான் மூலம் மேற்கொள்ளப்பட்டாலும், சமீபத்திய பயங்கரவாத அச்சுறுத்தலை ஒழிக்க உளவுத்துறை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் கூறினார்.
இஸ்லாமிய பயங்கரவாதத்தை நிறுத்த வேண்டும், இது இலங்கைக்கு மட்டுமல்ல, முழு உலக்திற்குமே அச்சுறுத்தல் என்று பிரதமர் கூறினார்.
இன்று (13) நேலம் போகுனா மஹிந்த ராஜபக்ஷ அரங்கில் (Nelum pokuna mahinda rajapaksa theatre) நடைபெற்ற 13 வது பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் பேசினார்.
இந்தியா, சீனா, பங்களாதேஷ், இந்தோனேசியா, மலேசியா, மாலத்தீவு, நேபாளம், ஓமான், பாகிஸ்தான், ருவாண்டா, சவுதி அரேபியா, சூடான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 157 வெளிநாட்டு மாணவ அதிகாரிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.