உழவு இயந்திரத்தில் அகப்பட்டு குடும்பஸ்தர் பலி
உழவு இயந்திரத்தினுள் அகப்பட்டு குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலீஸார் தெரிவித்துள்ளனர் .
இந்த சம்பவம் நாவற்குழி தெற்கு பகுதியில் 13/12/2019 வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.30 மணியளவில் இடம் பெற்றுள்ளது
இந்த விபத்தில் 48 வயதான நான்கு பிள்ளைகளின் தந்தையான காந்தி ஜெயந்தீபன் (ரகுநாதன்) என்பவரே உயிரிழந்துள்ளார்.
நாவற்குழி தெற்கு கடற்கரையோரப் பகுதியில் மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரத்தில் ஏறிச் சென்ற போது தவறி விழுந்து சில்லுக்குள் அகப்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சடலம் யாழ் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.