90 பானைகளில் பொங்கல் நிகழ்வு
கிளிநொச்சி அம்பாள்குளம் ஸ்ரீ மனோன்மணி அம்பாள் ஆலய நிர்வாகம் ஆலயத்தை பொறுப்பெடுத்து 90 நாட்கள் நிறைவடைந்த நிலையில் 90 பானைகளில் பொங்கல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
மிகச் சிறப்பாக ஆலய நிர்வாகத்தை முன்னெடுத்து செல்வதாலும் ஆலய கட்டுமான பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வருவதாலும் அவர்கள் பதவிக்கு வருகை தந்து இன்றுடன் மூன்று மாதங்களை எட்டிய நிலையில் காலாண்டு உற்சவமாக அவ்வூர் மக்கள் மற்றும் ஆலய பரிபாலன சபையினர் இணைந்து தொண்ணூறு பானைகளில் பொங்கல் செய்து சிறப்பு வழிபாடு ஒன்றினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.