Wed. May 1st, 2024

50 வீத வாக்கு பதிவுகள் நிறைவு!!

அமைதியான முறையில் நடந்துவரும் எல்பிட்டி பிரதேச சபைத் தேர்தலில் இதுவரை 50 வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளன.

இன்று காலை 7 மணிக்கு 17 தொகுதிகளில் 47 வாக்குச்சாவடிகளில் ஆரம்பமான வாக்குப்பதிவுகள் பிற்பகல் 4 மணிவரை இடம்பெறவுள்ளன.

எல்பிட்டி பிரேதேச சபைத் தேர்தலில் 53 ஆயிரத்து 384 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

எல்பிட்டி பிரதேச சபைக்கு 28 உறுப்பினர்கள் தெரிவாகவுள்ளனர்.

அவர்களில் 17 பேர் தொகுதிவாரியாகவும், 11 பேர் விகிதாசர முறையிலும் தெரிவு செய்யப்படுவார்கள்.

அதேநேரம், தேர்தலுக்காக எல்பிட்டி பிரதேசத்தில் விசேட பாதுகாப்பு ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்