Wed. May 15th, 2024

குளத்தில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு!! -வவுனியாவில் பரபரப்பு-

வவுனியா மாவட்டத்தில் உள்ள பேயாடிகூழாங்குளத்தில் இருந்து பெண் ஒருவரின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.

அப்பகுதியைச் சேர்ந்த எஸ்.விஜயலக்சுமி (வயது 56) என்பவரே சடலமாக மீட்கப்பட்டவர் ஆவர்.

குறித்த பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 4 தினங்களுக்கு முன்னர் வீட்டில் இருந்து வெளியில் சென்ற நிலையில் காணாமல் போயிருந்தார். இது தொடர்பில் மடுகந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் பேயாடிகூழாங்குளம் குளப்பகுதியில் ஆடுமேய்த்துக் கொண்டிருந்தவர்கள் குளத்தில் சடலம் ஒன்று மிதப்பதை அவதானித்து பொலிசாருக்கு தகவல் வழங்கினர்.

சம்பவ இடத்திற்கு சென்ற மடுகந்தை பொலிசாரும், இராணுவத்தினருடனும் குளத்தில் இருந்த சடலத்தினை மீட்டனர்.

குறித்த சடலமானது கடந்த நான்கு தினங்களுக்கு முன்னர் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட எஸ்.விஜயலக்சுமி (வயது 56) என்பவருடையது என உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது. இது குறித்து மடுகந்தை பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்