Fri. May 3rd, 2024

25 வருடமாக திருத்தபடாமல் இருக்கும் அச்சுவேலி பாடசாலை வீதி

யாழ் அச்சுவேலி மத்திய கல்லூரிக்கு முன்பாக உள்ள பிரதான வீதி யுத்தம் ஆரம்பித்த காலம் தொடக்கம்  திருத்தப்படவில்லை.   பொதுமக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் அதிகமாக போக்குவரத்து செய்யும் வீதி குண்டும் குழியுமாக காணப்படுகின்றது.  தற்போது பெய்து கொண்டிருக்கும் மழையினால் மழைநீர் குண்டுகளில் தண்ணீர் நிரம்பி நிற்பதனால் அச்சுவேலி மத்திய கல்லூரி பாட சாலைக்கு வரும் மாணவர்கள்பல சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். அப்பகுதியிலுள்ள பிரதேச சபையோ அல்லது பிரதேச செயலகங்கமோ இவ்வீதி திருத்துவதற்கான எந்தவித முயற்சியையும் எடுக்கவில்லை. இவ்வீதியை வீதி அதிகார சபை உடனடியாக  திருத்துவதற்கான நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்கிறார்கள்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்