Wed. May 1st, 2024

15வயது மாணவனை ஒருவருடமாக பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியை கைது

மாணவனொருவனை தமது பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்தி துஸ்பிரயோகம் செய்த ஆசிரியை மொனராகலைப் பொலிசார் நேற்று (11-10-2019) கைது செய்துள்ளனர்.

மொனராகலைப் பகுதி பாடசாலையொன்றில் கடமையாற்றி வரும் ஒரு ஆசிரியை , 10 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் 15 வயது நிரம்பிய மாணவனை டியூசன் வகுப்பிற்கு வருமாறு தமது வீட்டிற்கு அழைப்பித்து  தனது பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திவந்துள்ளார்

குறிப்பிட்ட ஆசிரியை அடிக்கடி கையடக்கத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வந்ததை அறிந்த மாணவனின் தாய் , சந்தேகம் அடைந்து மாணவனின் கையடக்கத் தொலைபேசியை எடுத்து ஆராய்ந்தபோது ,ஆசிரியையிடமிருந்து மகனுக்கு வந்த குறுந்தகவல்களைக் கண்டு விடயத்தை புரிந்து கொண்டுள்ளார்.

இது குறித்து மாணவனின் தாய் மொனராகலைப் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்ததையடுத்து பொலிசார் குறிப்பிட்ட ஆசிரியையின் வீட்டிற்கு விரைந்து ஆசிரியையையும் அம்மாணவனையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரிடம் மேற்கொள்ளப்படட விசாரணையில் ஆசிரியைக்கும் மாணவனுக்குமிடையிலான உறவு கடந்த ஒருவருடமாக இடம்பெற்று வருவதும் மாணவனை கட்டாயப்படுத்தி தமது வீட்டிற்கு வரவழைத்து ஆசிரியை தனது பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்தி துஸ்பிரயோகம் செய்துள்ளார்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்