வீசா இன்றியிருந்த 7 சீனர்கள் கைது!!
புத்தளம் வன்னாத்தவில்லு பகுதியில் சட்டவிரோதமாக நாட்டுக்குள் தங்கியிருந்த சீன நாட்டைச் சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் 7 பேரும் விசா இன்றி, புத்தளம் அருவக்காலு பிரதேசத்தில் உள்ள திண்மக் கழிவகற்றல் நிலையத்தில் பணிபுரிந்து வந்துள்ள நிலையிலேயே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வன்னாத்தவில்லு பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய சிவில் பாதுகாப்புக் குழு உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று (19) புத்தளம் நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வன்னாத்தவில்லு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.