Mon. Apr 29th, 2024

பரிதாபமாக விடுதலை(ப்புலிகளின் பொருட்களை) தேடி..அலையும் இராணுவத்தினர்

இறுதிப்போரின் போது விடுதலைப்புலிகளால் புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் தங்கம் , மற்றும் ஆயுதங்களை தேடி அகழ்வு நடவடிக்கையொன்று இன்று முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையம் முன்பாகவுள்ள பழைய இரும்பு பொருட்கள் விற்பனை செய்யும் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டது .
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தின் அனுமதியுடன் பொலிஸார் ,விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து இந்த அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதிலும் எந்தவிதமான பொருட்களும் கைப்பற்றப்படவில்லை
இதற்கு முன்னரும் இதற்கு அண்டிய பகுதிகளில் அகழவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் எந்தவிதமான போர்டுகளும் மீட்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்றையதினமும் எந்தவிதமான பொருட்களும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்