வாதரவத்தை பெண்கள் எல்லேயில் சாதிப்பு
அதிரடியான துடுப்பாட்டம் மற்றும் சிறப்பான களத்தடுப்பால் யா/வாதரவத்தை வித்தியாலய அணி சம்பியன் கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டனர்.
யாழ்ப்பாணம் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான பெண்களுக்கான எல்லே போட்டியின் இறுதியாட்டம் இன்று வெள்ளிக்கிழமை யா/கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.
இதன் இறுதியாட்டத்தில் வாதரவத்தை விக்னேஸ்வரா வித்தியாலய அணியை எதிர்த்து புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரி அணி மோதியது.
முதலில் துடுப்பெடுத்தாடிய புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரி அணி 30 பந்துகளில் ஓட்டம் எதனையும் பெறாமல் ஆட்டத்தை நிறைவு செய்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய வாதரவத்தை வித்தியாலய அணி 2 பந்துகளில் ஒரு ஓட்டத்தை பெற்று சம்பியன் கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டனர்.
3ம் இடத்தை கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலய அணி பெற்றுக் கொண்டது.