திங்கள் அரச அலுவலகங்களுக்கு விசேட விடுமுறை
அரசாங்க அலுவல்களுக்கு விசேட விடுமுறை தினமொன்றை பிரகனப்படுத்துதல் தொடர்பாக பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரினால் அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் போக்குவரத்து சிரமங்களையும், மின்சாரம் இல்லாத நிலையில் அலுவலகங்களைக் கொண்டு நடாத்துவதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் கவனத்தில் கொண்டு எதிர்வரும் திங்கட்கிழமை 2ம் திகதி அரசாங்க அலுவலகர்களுக்கான விசேட விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.