வவுனியா பம்பைமேடு வைத்தியசாலை கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றம்
வவுனியா பம்பைமடு ஆயுள்வேத ஆதார வைத்தியசாலை கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டுள்ளது.
சுமார் 80 படுக்கைகள் கொண்ட இச்சிகிச்சை நிலையம்
இராணுவத்தினரால் ஒழுங்கமைக்கப்பட்டு நேற்று சுகாதார பிரிவினரிடம் கையளிக்கப்படது.
கொரோனா தொற்றுக்குள்ளாகும் கர்ப்பிணி தாய்மார்களிற்கு சிகிச்சை வழங்குவதற்காக இவ் ஆயுள்வேத ஆதார வைத்தியசாலை சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டுள்ளதுடன், 80 படுக்கை வசதிகளை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.