Thu. May 2nd, 2024

வவுனியா கூமங்குலம் பகுதியில் மோட்டார் சைக்கிள் எரிப்பு, இருவர் கைது

வவுனியா கூமங்குலம் பகுதியில் வாள்களுடன் சென்று  மோட்டார் சைக்கிளை தீயிட்டு எரித்த சம்பவம் தொடர்பில் இன்று இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கூமாங் குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் நேற்று அதிகாலை நுழைந்த சிலர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை தீக்கிரையாக்கி உள்ளனர். அத்துடன் வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்களை உடைத்து விட்டு வீட்டில் வளர்க்கப்பட்ட இரண்டு விலை உயர்ந்த நாய்க்குட்டிகளை திருடியுள்ளார்கள். இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் வவுனியா பொலிஸார்   இளைஞர்களை கைது செய்துள்ளதுடன் அவரிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  தீயிட்டு எரித்த சம்பவம் தொடர்பில் இன்று இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்