போலீசாரின் மூர்க்கத்தனமான தாக்குதல் சாரதி வைத்தியசாலையில்
போலீசாரின் தாக்குதலுக்கு உள்ளான சாரதி அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த சம்பவம் வசாவிளான் ஒட்டகப்புலம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதில் 38 வயது கந்தசாமி ஜெயரூபன் மூர்த்தி என்ற குடும்பஸ்தர் தாக்குதலுக்கு உள்ளானார். நேற்று காலை உழவு இயந்திரத்தில் சிவப்பு மணல் ஏற்றிக்கொண்டு வந்த வாகனத்தை ஓட்டகப்புலம்பகுதியில் சிவில் உடையில் நின்ற காங்கேசன்துறை விஷேட குற்றத்தடுப்பு பொலிசார் சோதனையிட்டுள்ளனர். கிராமசேவையாளர் அனுமதியுடன் மணல் ஏற்றியதாகவும் தற்போது மண் எடுப்பதற்கு அனுமதி தரப்பட்டுள்ளதால் மண் எடுத்து வந்ததாகவும் பொலிஸார்ருக்கு எடுத்துக் கூறியுள்ளார் ஆத்திரம் அடைந்த போலீசார் உழவு இயந்திரத்தின் சாரதியை மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளது உடன் கைத்துப்பாக்கியால் நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதியில் தாக்கியுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட நபர் வீதியில் மங்கியநிலையில் நபரை அச்சுவேலி பொலிஸாரின் வாகனத்தில் எடுத்துச் சென்று அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இவருடைய தாக்குதல் தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழுவுக்கு முறையிட்டு உள்ளதாக தெரியவருகிறது.