வவுனியாவில் கும்பல் ஒன்று வீடு புகுந்து தாக்கியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த அறுவர் காயமடைந்துள்ளனர்.
நேற்று இரவு 11 மணியளவில் ஆச்சிபுரம் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் கத்திகளுடன் புகுந்த குழுவினர் அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இத்தாக்குதல் காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்கள் உட்பட 6 பேர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதல் மேற்கொண்ட கும்பல் தப்பி சென்றுள்ளதாகவும், சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.