Sat. Apr 27th, 2024

வவுனியாவில் மின் தடை பற்றிய அறிவித்தல்

வவுனியாவில் நாளையும் மற்றும் வேறு தினங்களும் மின்சாரம் தடைப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இம்மாதம் 10, 14, 15, 16, 17, 18, 19 ஆம் , ஆகிய தினங்களில் காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படுவதாகவும் அத்தியாவசிய பராமரிப்பு வேலைகளுக்காக மின்சாரம் துண்டிக்கப்படுவதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அந்த வகையில், 10ம் திகதி வவுனியா சூடுவெந்தபுலவு கிராமத்திலும், 14ம் திகதி வவுனியா புதிய சின்னக்குளம் கிராம், அரசடிக்குளம் பகுதியிலும், 15ம் திகதி வவுனியா புதிய சின்னக்குளம் கிராம் இ அரசடிக்குளம் பகுதியிலும், 16ம் திகதி வவுனியா கோவிற்குளம் 10வது ஒழுங்கையிலிருந்து சிதம்பரபுரம் வரையிலான பகுதியிலும், 17ம் திகதி வவுனியா அரசடிக்குளம் பகுதியிலும்,18ம் திகதி வன்னி இராணுவ படை முகாம் , வன்னி விமானப்படை முகாம் , விமானப்படை றேடார் பகுதியிலும்,
19ம் திகதி வவுனியா கோவிற்குளம் 10ம் ஒழுங்கையிலிருந்து சிதம்பரபுரம் வரையிலும் , மகாகச்சக்கொடிய கிராமம் ஆகிய இடங்களிலும் மின் தடை அமுல் படுத்தப்பட்டுள்ளது. இந்த நேரங்களில் வைத்தியசாலை மற்றும் மக்கள் பயன்பாட்டிற்கான பொது இடங்களில் முன்கூட்டியே மின் தடையை நிவர்த்தி செய்யக்கூடிய மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என கேட்கப்பட்டுள்ளது.
எனவே மக்கள் அனைவரும் மின்தடைக்கான தேவையான முன் ஆயத்த நடவடிக்கைளை எடுக்குமாறு இலங்கை மின்சார சபை கேட்டுக்கொண்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்