வல்வெட்டித்துறையில் 13 பேருக்கு கோரோனோ
வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் 13 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஆதிகோவிலடி பகுதியில் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில், வல்வெட்டித்துறையின் பல பகுதிகளில் பீ.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனை நடத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் தீருவில் பகுதியில் 100 போிடம் எழுமாற்றாக நடத்தப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 13 பேருக்கு தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.