Fri. Apr 26th, 2024

வல்லையில் கொலை மேலும் ஒருவர் சரண்

வல்லைப் பகுதியில் இடம் பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும்  நபர் நேற்று சட்டத்தரணியூடாக நீதி மன்றில் சரணடைந்துள்ளதுடன், அவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் 2ம் திகதி வடமராட்சி வல்லைப் பகுதியில் உள்ள மதுபான நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் கைகலப்பு இடம்பெற்றது. இதில் ஒருவர் போதிலால் குத்தப்பட்ட உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் திக்கம் நாச்சிமார் கோவிலடியைச் சேர்ந்த குணசேகரம் ஞானசோதி (வயது 25) என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவத்தையடுத்து 4 பேர் தலைமறைவாகினர்.நெல்லியடி பொலீஸாரின் தேடுதலில் அல்வாய் கிழக்கு பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவரை நெல்லியடி பொலீஸார் வீட்டில் வைத்து கைது செய்துள்ளனர். இதனையடுத்து குடத்தனை மேற்கு பகுதியைச் சேர்ந்த ஒருவரும் சில தினங்களுக்கு பின்னர் மேலும் ஒருவரும் என சரணடைந்தனர். குறித்த மூவரையும் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சட்டத்தரணி என்.சிறிகாந்தா ஊடாக 24 வயதுடைய ஒருவரும் நேற்று சரணடைந்துள்ளார்.அவரையும் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்