Sun. Apr 28th, 2024

வலுக்கட்டாயமாக வெளியே தள்ளும் முன்பு டோனியே ஓய்வு பெற வேண்டும் : முன்னாள் கேப்டன் கவாஸ்கர்

இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியே தள்ளும் முன்பு டோனியே ஓய்வு பெற வேண்டும் என்று முன்னாள் கேப்டன் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடாமல் விமர்சனத்துக்குள்ளான 38 வயது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் டோனி, வெஸ்ட்இண்டீஸ் பயணத்துக்கான இந்திய அணியில் இருந்து ஒதுங்கி ராணுவ பயிற்சியில் ஈடுபட்டார். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரிலும் அவர் தெரிவு செய்யப்படவில்லை. டோனி மிக விரைவில் ஓய்வு பெறுவார் என்று செய்திகள் வெளியாகி வரும் நிலையில் அவர் மவுனம் காத்து வருவது இந்திய வாரியத்துக்கு பெரிய தலையிடியாக மாறியுள்ளது . இந்த நிலையில் அடுத்து நடைபெற இருக்கும் வங்காளதேசத்துக்கு எதிரான தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் டோனியை சேர்க்க வேண்டுமா? என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர்ரிடம் கேட்டபோது ,
வங்காளதேசத்துக்கு எதிரான தொடரில் டோனியை சேர்க்க வேண்டியதில்லை. டோனியை ஒதுக்கி விட்டு அவருடைய இடத்துக்கு யாரை கொண்டு வர வேண்டும் என்பது குறித்து நாம் யோசிக்க வேண்டிய நேரம் இது. அடுத்த ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடைபெற இருப்பதால் நிச்சயமாக இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்துக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதே எனது கருத்தாகும் என்று கூறினார்

. இந்திய கிரிக்கெட்டுக்கு டோனி செய்த பங்களிப்பு மிகவும் மகத்தானது . இருப்பினும் அவரை தாண்டி அடுத்த வீரரை அந்த இடத்துக்கு கொண்டு வரவேண்டிய நேரம் இதுவாகும். டோனியை வலுக்கட்டாயமாக வெளியே தள்ளுவதற்கு முன்பாக அவரே சென்று விடுவார் என்று நினைக்கிறேன் என்றும் கூறினார் கவாஸ்கர்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்