Sun. May 12th, 2024

துப்பாக்கிச் சூட்டில் தமிழ் இளைஞன் பலியானார்

இனந்தெரியாத நபர்களால் நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கனடாவைச் சேர்ந்த தமிழ் இளைஞன் சந்திரகாந்தன் சாரங்கன் (வயது 26) என்பவரே பலியாகியுள்ளார்.
இச்சம்பவம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை 19ம் திகதி கனடா டொறண்டோவில் இடம் பெற்றுள்ளது.
சம்பவம் பற்றி தெரியவருவதாவது நேற்று முன்தினம்  இரவு 9.30 மணியளவில் தனது வேலையை முடித்து விட்டு ஹோட்டலில் இரவு உணவு வாங்கிக் கொண்டு ஹோட்டலுக்கு வெளியே வரும் போது திடீரென்று மின்சாரம் தடைப்பட்டது. அப்போது இனந்தெரியாத நபர்களால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் சாரங்கன் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி இறந்துள்ளார். சம்பவம் தொடர்பாக பொலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தாக்குதல் இவரை குறிவைத்து நடத்த பட்டதா அல்லது வேறு ஒருவருக்கு வைக்கப்பட்ட  தாக்குதலில் தற்செயலாக இவர் அகபட்டாரா என்பது இன்னும் தெரியாத நிலையில் விசாரணைகள் தொடர்கின்றது.  சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக கனடா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நபரின் தந்தை அச்சுவேலி தெற்கைச் சேர்ந்த சந்திரகாந்தன் எனவும் தாயார் நயினாதீவைச் சேர்ந்த சந்திராதேவி எனவும் தெரியவந்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்