வடமாகாண தனிநடனம் உடுப்பிட்டி மகளிர் கல்லூரி மாணவி முதலிடம்
வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான தனி நடனப் போட்டியில் உடுப்பிட்டி மகளிர் கல்லூரியை சேர்ந்த மாதினீ ஜெகதீஸ்வரன் முதலாமிடத்தைப் பெற்று தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.
வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான தமிழ்மொழித் தின தனிநடனப் போட்டி யாழ் இந்து மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.
இதில் பிரிவு 4 ற்கான போட்டியில் உடுப்பிட்டி மகளிர் கல்லூரியைச் சேர்ந்த மாதினீ ஜெகதீஸ்வரன் முதலாமிடத்தைப் பெற்று தேசிய மட்ட போட்டிக்குத் தெரிவாகியுள்ளார்.
அத்துடன் உடுப்பிட்டி மகளிர் கல்லூரி வடமாகாண தமிழ் மொழித்தின நாட்டிய நாடக போட்டியில் மூன்றாமிடத்தைப் பெற்றுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.