வடமாகாண சம்பியனாகின யாழ் மாவட்ட செயலக அணிகள்
வடமாகாண விளையாட்டு திணைக்களம் நடாத்திய மாவட்ட அணிகளுக்கு இடையிலான ஆண்கள் பெண்களுக்கான கூடைப்பந்தாட்டத்தில் இரு பிரிவுகளிலும் யாழ் மாவட்ட செயலக அணிகள் சம்பியனாகின.
இதன் இறுதியாட்டம் நேற்று சனிக்கிழமை யாழ்ப்பாண ஓல்ட் பார்க் கூடைப்பந்தாட்ட மைதானத்தில் நடைபெற்றது.
ஆண்களுகான இறுதியாட்டத்தில் யாழ் மாவட்ட செயலக அணியை எதிர்த்து வவுனியா மாவட்ட செயலக அணி மோதியது. யாழ் மாவட்டச் செயலக அணி வெற்றி பெற்றுச் சம்பியனாகியது.
பெண்களுக்கான இறுதியாட்டத்தில் யாழ் மாவட்டச் செயலக அணியை எதிர்த்து மன்னார் மாவட்டச் செயலக அணி மோதியது. இதிலும் யாழ் மாவட்ட செயலக அணி வெற்றி பெற்றுச் சம்பியனாகியது