Fri. May 17th, 2024

யாழில் வீடுடைத்து நகை திருடிய இளைஞன் கைது

குருநகரில் வீட்டில் யாரும் இல்லாதபோது உடைத்து 20 பவுன் தங்க நகைகளும் 35,000 ரூபா பணமும் கொள்ளையிட்ட 17வயது இளைஞன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் நகைகளை வாங்கி அடகு வைத்த ஒருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டதுடன் கொள்ளையடித்த நகைகள் மீட்கப்பட்டுள்ளன. இந்தக் கொள்ளைச் சம்பவம் கடந்த 17ஆம் தேதி முற்பகல் இடம்பெற்ற வீட்டில் இருந்தவர்கள் வேலைக்கு சென்றிருந்த வேளை வீட்டை உடைத்து நகைகள் கொள்ளை இடப்பட்டன.  இந்த கொள்ளை சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் யாழ் தலைமை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர். குருநகரைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞன் பொலிஸாரால் நேற்று  கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணையை முன்னெடுத்த போது கொள்ளையிடப்பட்ட நகைகளை அடகு வைத்து கொடுத்தவரும் நேற்று  கைது செய்யப்பட்டுள்ளார் .  தற்போதைய தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளார்கள்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்