வடமராட்சியில் நிலகீழ் அறையில் கசிப்பு விற்ற நபர் கைது
வடமராட்சிப் பகுதியில் நெல்லியடி போலீசாருக்கு பல வருடங்களாக அகப்படாமல் சட்டவிரோதமானமுறையில் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்த ஓருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நபர் தனது வீட்டில் சுரங்கம் கிண்டி கசிப்பு விற்பனை செய்து வந்தார். நெல்லியடி பொலிஸார்ருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து அவ்வீட்டை சுற்றி வளைத்து வீட்டில் உள்ள சுரங்கத்தில் கசிப்பு சாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வீட்டில் உள்ளவர் கைது செய்யப்பட்டு பருத்தித்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பருத்தித்துறை நீதிமன்ற நீதிபதி அவர்களினால் ஒரு இலட்சம் பெறுமதியான 2 ஆள்பினையில் செல்லுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.