Sat. May 4th, 2024

றோட்டரி ஆளுநர் நல்லூருக்கு விஜயம்

இலங்கை மற்றும் மாலைதீவிற்கான றோட்டறி ஆளுனர் நல்லூர் விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
கடந்த சனிக்கிழமை இலங்கை மற்றும் மாலைதீவிற்கான றோட்டறி ஆளுநர் புபுது டி சொய்ஷா, சர்வதேச றோட்டறி மாவட்டம் – 3220 இன் செயலாளர் முன்னாள் தலைவர் குமார் சுந்தரராஜ், உதவி மாவட்ட ஆளுனர் முன்னாள் தலைவர் டாக்டர் அருமைநாயகம் ஜெயக்குமார், உதவி மாவட்ட செயலாளர் முன்னாள் தலைவர் அஜித் ஜெயவிக்ரம மற்றும் உதவி மாவட்ட ஆளுனர் முன்னாள் தலைவர் அ.ஜெயராஜா ஆகியோர் மாவட்ட ஆளுனரின் உத்தியோக பூர்வ தரிசிப்பிற்காக நல்லூர் றோட்டறிக் கழகத்திற்கு விஜயம் செய்தார்கள்.
அத்துடன் நல்லூர் றோட்டறி கழகத்தின் 10வது தலைவர் பதவியேற்பு வைபவம் அதே தினத்தில் யாழ்ப்பாணம் ஞானம்ஸ் ஹொட்டலில் நடைபெற்றது. நல்லூர் றோட்டறி கழகத்தின் பத்தாவது
தலைவராக றோட்டேரியன் தங்கராஜா றவினதாஸ் அவர்கள் பதவியேற்றுக்கொண்டதுடன் அவரின் நிர்வாக சபை உறுப்பினர்களும் பதவியேற்றார்கள்.
அத்துடன் பொறியியலாளர் ஆனந்தராஜா அபிராஜ், D.R.R அட்ரியன் மற்றும் பாலசிங்கம் பாலகுமார் ஆகியோர் நல்லூர் றோட்டறிக் கழகத்தில் புதிய அங்கத்தவராக இணைந்து கொண்டார்கள்.
இதில் இலங்கை மற்றும் மாலைதீவு றோட்டறி மாவட்ட ஆளுனர் புபுது டி சொய்ஷா அவர்கள் பிரதம விருந்திராகவும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை வைத்திய நிபுணரும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் வருகை தரும் விரிவுரையாளருமான வைத்திய நிபுணர் தயாளன் அம்பலவாணர் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும், விருந்தினர்களாக சர்வதேச றோட்டறி மாவட்டம் – 3220 இன் செயலாளர் முன்னாள் தலைவர் குமார் சுந்தரராஜ், உதவி மாவட்ட ஆளுனர் முன்னாள் தலைவர் டாக்டர் அருமைநாயகம் ஜெயக்குமார் மற்றும் நல்லூர் றோட்டறி கழகத்தின் கடந்த றோட்டறி ஆண்டிற்கான தலைவர் தர்மலிங்கம் கபிலன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்