20% கழிவில் புத்தக விற்பனை
வடமாகாண பாடசாலை மாணவர்களின் கற்றலை மேம்படுத்தும் நோக்குடன் வடமாகாண கல்வி அமைச்சு மற்றும் வட மாகாணகல்வித் திணைக்களத்தினது அனுசரணையுடன் எதிர்வரும் 18,19,20 ம் திகதிகளில் தேசிய கல்வி நிறுவகத்தின் புத்தக விற்பனையை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் நடத்த தேசிய கல்வி நிறுவனத்தால் அச்சிடல் மற்றும் வெளியீடுகள் துறையால் ஒழுங்குகள் செய்யப்படுகின்றது.
தேசிய கல்வி நிறுவகத்தின் வெளியீடுகளான ஆசிரிய வளநூல்கள், மேலதிக வாசிப்பு நூல்கள், பயிற்சி நூல்கள், செயற்பாட்டு நூல்கள் போன்றவை (குறிப்பாக தமிழ் மொழி மூலம், ஆங்கில மொழி மூலம்) 20% கழிவு விலையில் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.