மைக்கல் நேசக்கரம் ஊடாக மலசல கூடம் கையளிப்பு
நீண்டகாலமாக மலசல கூடமின்றி வாழ்ந்து வந்த குடும்பத்திற்கு மலசல கூட வசதியை மைக்கல் நேசக்கரம் ஊடாக குறித்த குடும்பத்தினருக்கு இன்று வழங்கி வைக்கப்பட்டது.
அமரா் தங்கராசா கனகம்மா நினைவாக குடும்பத்தினர் நிதிப்பங்களிப்புடன் நீண்டகாலமாக மூன்று பிள்ளைகளுடன் மலசல கூடமின்றி வாழ்ந்து வந்த குடும்பத்திற்கு ரூபா 230,000 செலவில் மலசல கூடம் அமைக்கப்பட்டுள்ளது மலசல கூடம் இன்று கையளிக்கப்பட்டது.
மைக்கல் நேசக்கரம் வறிய குடும்பங்களைத் தெரிவு செய்து அவர்களின் அடிப்படைத் தேவைகள் பலவற்றை நிறைவேற்றி வருவது குறிப்பிடத்தக்கது.