Sun. Apr 28th, 2024

யா / கரவெட்டி மாணிக்கவாசகர் வித்தியாலயத்தின் தரம்-5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பளிப்பு நிகழ்வு

யா / கரவெட்டி மாணிக்கவாசகர் வித்தியாலயத்தில் கடந்த 2023 ம் ஆண்டு நடைபெற்ற தரம் – 5 புலமைபரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வு நாளைய தினம் 2024-01-07 ஞாயிற்றுக்கிழமை மு.ப 9.00 மணிக்கு நடைபெறவிருக்கின்றது.

இம்முறை நடைபெற்ற தரம் – 5 புலமைபரிசில் பரீட்சையில் 21 மாணவர்கள் சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்கள். அத்துடன் இப்பரீட்சையில் 44 மாணவர்கள் 100 புள்ளிகளுக்கு மேலும் 51 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேலும் பெற்று சாதனை படைத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வு நாளை பாடசாலை வளாகத்தில் அதிபர் திரு. மகாதேவன் மாககேதீஸ்வரன் தலைமையில் நடைபெறவிருக்கின்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக ஆதார வைத்தியசாலை பருத்தித்துறை வைத்திய அதிகாரி செல்வி. பிரியந்தி தர்மராஜா அவர்களும் சிறப்பு விருந்தினராக ஓய்வுநிலை ஆசிரியர் திருமதி. வசந்தி முருகானந்ததாஸ் அவர்களும் கலந்து சிறப்பிக்கவிருக்கிறார்கள்.

இப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் மற்றும் அவர்களை தயார்ப்படுத்திய அதிபர், ஆசிரியர்களையும் மேலும் பல வெற்றிகளை பெற பெற்றோரும், பாடசாலை சமூகத்தினரும் வாழ்த்துகின்றனர் .

சிவகுமார் அஜய்
புள்ளி 170
ஸ்ரீகாந் அஸ்மியா
புள்ளி 170
ஞானேந்திரன் பரிதிகா
புள்ளி 166
நிசந்தன் துவமிஷா
புள்ளி 166
கலைரூபன் கரிஸ்
புள்ளி 165
றவிச்சந்திரன் அபர்ணா
புள்ளி 164
விஜதாஸ் அக் ஷனா
புள்ளி 162
அருந்தவநாதன் அர்ஜிகன்
புள்ளி 162
ரமேஸ் வான்மீகா
புள்ளி 161
இளங்கோ அபிநயா
புள்ளி 160
சாந்தரூபன் அபிதா
புள்ளி 159
சுரேஸ்குமார் சாகித்யா
புள்ளி 156
பரணிதரன் பவித்திரன்
புள்ளி 156
கஜேந்திரன் பானுஜென்
புள்ளி 155
ரமணன் கம்சிகா
புள்ளி 154
றொபேட்றேகன் வேபிசா
புள்ளி 154
திருக்குமார் பவிஷா
புள்ளி 154
சுதாகர் நிஷான்
புள்ளி 152
செந்தில்மாதவன் ஹரிகரன்
புள்ளி 150
கேதீஸ்வரன் அபிநஜா
புள்ளி 149
ஞானரூபன் வர்ஷன்
புள்ளி 147
அதிபர் திரு. மகாதேவன் மாககேதீஸ்வரன்
ஆசிரியர் திருமதி. ரேணுகா பரந்தாமன்
ஆசிரியர் திருமதி. ஸ்ரீதா ராஜ்குமார்

 

 

 

 

 

 

 

 

 

 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்