Wed. May 1st, 2024

யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கு  விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல் நிகழ்வு

யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கு
விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டின் கீழ் கிராமிய பாடசாலைகளிற்கான
 விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல் நிகழ்ச்சித் திட்டத்தில் இந்த விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
யாழ் மாவட்ட செயலாளர் ம.பிரதீபன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்
 முதன்மை விருந்தினராக கடற்றொழில் அமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களும், கல்வி பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டு அமைச்சின் செயலாளர் பற்றிக் நிறைஞ்சன், வடமாகாண உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் இ.இராஜசீலன், யாழ் மாவட்ட வலயக் கல்வி பணிப்பாளர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
விளையாட்டுத்துறையை வளர்க்கும் நோக்கில் யாழ் மாவட்டத்தில் உள்ள 28 பாடசாலைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்