Sat. May 4th, 2024

யாழ்.மாவட்டத்தில் 12 வருடங்களுக்கும் மேல் கடமையாற்றிய அதிகாரிகளுக்கு இடமாற்றம்

யாழ்.மாவட்டத்தில் 12 வருடங்களுக்கும் மேல் கடமையாற்றிய 5 பிரதேச செயலர்கள் மற்றும் ஒரு மேலதிக அரசாங்க அதிபருக்கு இடமாற்றம் வழங்கப்படவுள்ளது. 

இதன்படி யாழ்.மாவட்டத்தில் 18 வருடங்களாக கடமையாற்றும் ஊர்காவற்துறை பிரதேச செயலர் மஞ்சுளாதேவி சதீசன், நல்லுார் பிரதேச செயலர் அன்ரன் எழிலரசி,

மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் ( காணி) முரளிதரன் ஆகியோரும், அதேபோல் யாழ்.மாவட்டத்தில் சுமார் 15 வருடங்களாக கடமையாற்றும்,

தெல்லிப்பளை பிரதேச செயலர் சிவசிறி சண்முகராஜா, பொன்னம்பலம் பிறேமினி சாம்பசிவம் சுதர்சன் ஆகியோரும் இடமாற்றம் செய்யப்படவுள்ளனர்.

இவர்களில் ஒரே பிரதேச செயலகப் பிரிவில் ஆறு வருடங்கள் கடமையாக்கியவர்களுக்கு மாவட்டங்களுக்கிடையிலான இடமாற்றமும்,

ஒரு மாவட்டத்தில் 12 வருடங்களுக்கு மேல் கடமையாற்றியவர்களுக்கு மாகாணங்களுக்கிடையில் இடமாற்றமும் வழங்கப்பட உள்ளது.

ஆனால் ஒரே தடவையில் பலர் மாகாணத்தை விட்டு வெளியேறும் நிலை காணப்படுகின்ற நிலையில் அவர்களது இடத்தை நிரப்புவதற்கு

வெளி மாகாணங்களில் இருந்து விண்ணப்பிப்பவர்களின் தொகையைப் பொறுத்தே முடிவு செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்