இறுதியாட்டத்தில் RANGE TIGERS அணி
கொற்றாவத்தை றேஞ்சஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் கொற்றாவத்தை பிறீமியர் லீக் கிண்ணத்திற்கான கால்பந்தாட்ட தொடரில் றேஞ் ரைகர்ஸ் அணி இறுதியாட்டத்திற்குத் தகுதி பெற்றுள்ளது.
முதலாவது அரையிறுதி போட்டியில் இன்பரதன் & சிவநேசனை உரிமையாளராக கொண்ட சிவதாரன் தலைமையிலான RANGE TIGERS அணியினரை எதிர்த்து நவீனனை உரிமையாளராக கொண்ட மதுசாந் தலைமையிலான RANGE KINGS அணியினர் மோதினர்.
முதல் பாதியாட்டத்தில் RANGE TIGERS அணி வீரர்கள் 12வது நிமிடத்தில் யுந்தன், 22வது நிமிடத்தில் சுகந்தன் ஆகியோர் இருகோல்களைப் பதிவு செய்ய 2:0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தனர்.
இரண்டாவது பாதியாட்டத்தில் RANGE KINGS அணி வீரர் 36வது நிமிடத்தில் ஒரு கோலைப் பதிவு செய்ய ஆட்டம் விறுவிறுப்பின் உச்சக் கட்டத்தை எட்டியது. ஆனால் 39வது நிமிடத்தில்
RANGE TIGERS அணி வீரர் சுகந்தன் ஒரு கோலைப் போட ஆட்ட நேர முடிவில் RANGE TIGERS அணியினர் 3:1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று முதலாவது அணியாக RPL இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர்.
போட்டியின் ஆட்டநாயகனாக RANGE TIGERS அணியின் கோல்காப்பாளர் யதுவர்சன் தெரிவு செய்யப்பட்டார்.