யாழ் மாவட்டத்திற்கான கொரோனா தனிமைப்படுத்தல் நிலையம் தென்மராட்சி கொடிகாமத்தில்
யாழ் மாவட்டத்திற்கான கொரோனா தனிமைப்படுத்தல் நிலையம் தென்மராட்சி கொடிகாமத்தில் அமைக்கப்படவுள்ளதாகத் தெரியவருகிறது.
இதனை யாழ் மாவட்ட செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவித்துள்ளார்.
கொடிகாமம் 522 ஆவது படைப்பிரிவில் இவ் தனிமைப்படுத்தல் நிலையம் அமைக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தனிமைப்படுத்தல் அமைக்க பாதுகாப்பு அமைச்சு, இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்திருந்தது.
இதன்படி யாழ் மாவட்டத்திற்கான கொரோனா தனிமைப்படுத்தல் நிலையம் கொடிகாமம் படைமுகாமில் அமைப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் அவர்களுடன் தொடர்பை பேணியவர்கள் தங்கவைக்கப்படவுள்ளனர்.
இதற்காக 5 மில்லியன் ரூபா நிதிக்கும் கோரிக்கை விடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.