யாழ்ப்பாணத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா
நேற்று யாழில் கொரோனா தொற்றென இனங்காணப்பட்டவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உள்ளடங்குகின்றனர்.
தகப்பன் மற்றும் 9,11 வயதுகளுடைய இரண்டு பிள்ளைகளுக்கே ஒரே குடும்பத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
நேற்று யாழில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் இனங்காணப்பட்ட 8 பேரில் 6 பேர் ஆண்கள், 2பேர் பெண்கள் உள்ளடங்குவர்.
7 பேர் அரியாலையினையும் ஒருவர் வவுனியாவினையும் சேர்ந்தவர் என யாழ் போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.