Fri. May 3rd, 2024

மேலும் ஒருவருக்கு தொற்று செல்வச்சந்நிதி ஆலயத்திற்கு பக்தர்கள் வருவதை தவிர்கவும்

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்தில் உணவகத்தில் பணிபுரியும் ஒருவருக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று செல்வச் சந்நிதி ஆலயத்தில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கான அன்ரிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் உணவகத்தில் பணிபுரியும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பல ஆலயங்களில் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்காது செயற்படுவதனால் வடமராட்சி பகுதியில் சமூகத் தொற்று அதிகரித்து காணப்படுகிறது. செல்வச் சந்நிதி ஆலயத்தில் பூசகர்கள்,  தொண்டர்கள்,  உபயகாரர்களுக்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சமூத் தொற்றை கவனத்தில் கொள்ளாது பல அடியவர்கள் செல்வச் சந்நிதி ஆலயத்திற்கு வருகை தருகின்றனர். இதனால் காவலில் ஈடுபடும் இராணுவத்தினர் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர் பெரும் அசெளகரியங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்