Mon. Apr 29th, 2024

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு சென்ற முன்னாள் முதலமைச்சர் குழுவினர் சங்குப்பிடியில் தடுத்து நிறுத்தம்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு கொல்லப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக 18/5/2020 திங்கட்கிழமை காலை யாழ்ப்பாணத்திலிருந்து முள்ளிவாய்க்காலை நோக்கிச் சென்று கொண்டிருந்த வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான குழுவினர் சங்குப்பிட்டி சோதனைச் சாவடியில் தற்போது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

காலை ஆறு மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்ட அவர்கள் சங்குப்பிட்டியைச் சென்றடைந்த போது நிறுத்தப்பட்டதாக விக்கினேஸ்வரன் அங்கிருந்து தெரிவித்தார். அரை மணி நேரத்துக்கும் அதிகமாக தம்மைத் த டுத்து வைத்துள்ள படையினர், தம்மிடம் “தனிமைப்படுத்தல் றிப்போர்ட்” கேட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

தான் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக வீட்டிலேயே இருப்பதாகவும், உரிய சுகாதார முறைப்படிதான் மு ள்ளிவாய்காலுக்குச் செல்வதாகவும் தெரிவித்த விக்கினேஸ்வரன், நேற்றிரவே இதற்கான அனுமதியை பொலிஸாரிடமிருந்து தான் பெற்றுக்கொண்டிருப்பதாகவும் பதிலளித்திருக்கின்றார். இருந்த போதிலும், மேலிடத்துடன் தொடர்புகொள்வதாகத் தெரிவித்த பொலிஸ் அதிகாரி ஒருவர் அவர்களைத் தொடர்ந்தும் தடுத்து வைத்திருப்பvvதாகத் தெரிவிக்கின்றது.

இது தொடர்பாக தெரிவித்த விக்கினேஸ்வரன், தாம் அனைவரும் உரிய சுகாதார முறைப்படி முகக் கவசம் அணிந்தவாறு, ஒரே வாகனத்தில் வராமல் பல வாகனங்களில் பத்துப் பேர் மட்டுமே வந்ததாகவும் குறிப்பிட்டார். விக்கினேஸ்வரனுடன் தமிழ் மக்கள் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் க.அருந்தவபாலன், சிற்பரன் உட்பட சுமார் பத்துப்பேர் மட்டுமே வந்திருப்பதாகத் தெரிகின்றது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்