Fri. May 17th, 2024

இலங்கைக்கு தற்போதையநிலையில் இன்னொரு கிரிக்கெட் மைதானம் தேவையா ? சங்கடத்துக்குள் அரசாங்கத்தை மாட்டிவிட்ட மஹேல

40,000 இருக்கைகள் கொண்ட இலங்கையின் மிகப்பெரிய சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஹோமகமாவின் தியகமாவில் கட்டப்படும் என்று அமைச்சர் பண்டுலா குணவர்தன தெரிவித்தார்.
அமைச்சர் குணவர்தன தலைமையிலான தூதுக்குழு ஞாயிற்றுக்கிழமை மைதானம் கட்ட ஒதுக்கப்பட்ட உத்தேச நிலத்தை பார்வையிட்டது.
பகல் / இரவு வசதியுடன் கூடிய சர்வதேச கிரிக்கெட் மைதானம் 26 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டு மூன்று ஆண்டுகளுக்குள் முடிக்கப்பட உள்ளது.
இந்த நிலையில் இந்த மைதானம் கட்டுவது தொடர்பாக இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் மஹேல ஜெயவர்தன தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே உள்ள மைதானங்களில் நாங்கள் தேவையான அளவு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கிரிக்கெட்டுகளை விளையாடாத நிலையில் இன்னுமொரு மைதானம் எங்களுக்கு தேவையா என்று அவர் கருத்து வெளியிட்டு அரசாங்கத்தை சங்கடத்துக்குள் மாட்டிவிட்டுள்ளார்

 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்