முகக் கவசத்தை வலியுறுத்தி பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் இராணுவத்தினர் பிரச்சாரம்
கரவெட்டி சுகாதார பரிசோதகர்கள் மற்றும் இராணுவத்தினரால் முகக் கவசத்தின் அவசியத்தை வலியுறுத்தி நெல்லியடி பகுதியை கண்காணிப்பு நடவடிக்கைகளை இன்று மேற்கொண்டனர்.
தற்போது கொரோனா பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து அனைவரும் முகக் கவசத்துடன் வீதியில் நடமாடுமாறு பல தரப்பினரால் எடுத்துக் கூறப்பட்ட போதிலும் சிலர் முகக் கவசம் அணியாமலும், முகக் கவசத்தை முறையாக அணியாமலும் நடமாடி வருவது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு இதில் நெல்லியடி பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்கள் பார்வையிடப்பட்டு முகக் கவசத்தின் அவசியம்பற்றி எடுத்துக் கூறப்பட்டதோடு, முகக் கவசம் அணியாத பலருக்கு இராணுவத்தினரால் முகக் கவசம் வழங்கி வைக்கப்பட்டது.