Fri. May 3rd, 2024

மீசாலைப் பகுதியில் வாள்வெட்டு, வர்த்தகர் படுகாயம்

மீசாலைப் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் வர்த்தகர் ஒருபவர் படுகாயம் அடைந்துள்ளார்.

மீசாலைக்கும் சாவகச்சேரிக்கும் இடைப்பட்ட ஐயா கடையடிப் பகுதியில் நேற்று இரவு 8.00 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் அந்தப் பகுதியில் அழகுசாதன வர்த்த நிலையம் நடாத்தும் 35 வயதுடைய வர்த்தகர் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்