யாழ் மாவட்ட பிரதேச செயலக இளைஞர் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரில் பருத்தித்துறை பிரதேச செயலக இளைஞர் அணி 20 ஓட்டங்களால் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டனர்.
பொன்னாலை விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்றது. இறுதியாட்டத்தில் பருத்தித்துறை பிரதேச செயலக இளைஞர் அணியை எதிர்த்து நல்லூர் பிரதேச செயலக இளைஞர் அணி மோதியது.
முதலில் துடுப்பெடுத்தாடிய பருத்தித்துறை பிரதேச செயலக இளைஞர் அணி வழங்கப்பட்ட 8 ஓவர்களில் 4 பறிகொடுத்து 85 ஓட்டங்களைப் பெற்றனர். அவ்வணி சார்பில் நிரூபன் ஆட்டமிழக்காமல் 32 ஓட்டங்களையும், ராஜா 33 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் நல்லூர் பிரதேச செயலக இளைஞர் அணி சார்பில் பிரதாப் 3 விக்கெட்டுகளையும், நிமல் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நல்லூர் பிரதேச செயலக இளைஞர் அணி 6 விக்கெட்டுகளை பறிகொடுத்து 65 ஓட்டங்களை மாத்திரம் பெற பருத்தித்துறை பிரதேச செயலக இளைஞர் அணி 20 ஓட்டங்களால் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டனர். நல்லூர் பிரதேச செயலக இளைஞர் அணி சார்பில் கிசாந் 24, நிமல் 15 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் பருத்தித்துறை பிரதேச செயலக இளைஞர் அணி சார்பில் திஷாந் 2 விக்கெட்டுகளையும், ஜனன், ராஜா, கலை ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.