Tue. May 7th, 2024

மாலைசந்தை மைக்கல் விளையாட்டுக் கழகத்தில் உயிர்காக்கும் இரத்ததான முகாம்

கிளிநொச்சி கொக்காவில் வாகன விபத்தில்  09-01-2018 அன்று அகாலமரணமடைந்த அமரா்களான  ஜெயச்சந்திரன் , அருண் , சிந்துஜன் , கிருஸ்ணரூபன் ஆகியோரின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டும்  கடந்த காலங்களில் இளம் வயதில் உயிரிழந்த  மண்ணின் மைந்தர்கள்  நினைவாக  இரத்ததான முகாம் இடம்பெறவுள்ளது.
இந்த இரத்ததான முகாம்
மாலைசந்தை மைக்கல் விளையாட்டுக் கழகத்தில் எதிர்வரும் ஜனவரி மாதம் 6ம் திகதி  நடைபெறவுள்ளது. அத்துடன் அன்றைய தினம் தந்தை தாயை இழந்த பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணமும் வழங்கும் நிகழ்வும்,  புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு கௌரவிப்பும்,  உதவித்திட்டம் வழங்கும் நிகழ்வும் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்