மாகாண சுகாதார பணிப்பாளரின் உத்தரவை உதாசீனம் செய்யும் மந்திகை வைத்திய அதிகாரி
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் மருத்துவர் த.குகதாசன் அவர்களை மத்திய அரசாங்க உத்தரவுக்கமைய ஒழுக்காற்று விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு வசதியாக, விசாரணைகளில் அவரது தலையீடுகளை தவிர்ப்பதற்காகவும் உடனடியாக பொறுப்புக்களை பதில் வைத்திய அத்தியட்சகரிடம் கையளித்து யாழ் பிராந்திய சுகாதார பணிமனையில் இணையுமாறு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரால் இன்று பணிக்கப்பட்டிருந்தார்.
எனினும் அவர் இன்று மாலை வரை பொறுப்புக்களை கையளிக்கவில்லை. இதனால் அவர் ஆவணங்களையும் சாட்சிகளையும் திரிவு படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளாரோ என எமக்கு பலமான சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
நாளை காலை 8.30 மணிக்கு முன்பாக பதில் பணிப்பாளர் தனது பதவியை பொறுப்பேற்க வேண்டும் , தவறும் பட்சத்தில் பரு.ஆதார வைத்தியசாலை மருத்துவ அதிகாரிகள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றில் ஈடுபடுவது தவிர்க்க முடியாததொன்றாகிவிடும் என
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.