மஹிந்த தலைமையில் நாளை புதிய அரசாங்கம் ?
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புதிய அரசாங்கத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நானாயக்கார தெரிவித்தார்.
இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் நாட்டை நாடாளுமன்றத் தேர்தலுக்கு வழிநடத்துவதாகும்,என்று அவர் தெரிவித்தார்
இந்த விவகாரம் குறித்து முடிவெடுப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கூட்டப்பட்டதாக அவர் கூறினார்