Fri. Apr 26th, 2024

மழையால் தப்பி பிழைத்த இலங்கை

இன்று இங்கிலாந்து பிரிஸ்டல் நகரத்தில் இடம்பெற்ற 3 ஆவதும் இறுதியுமான ஒருநாள் ஆட்டத்தில் மழையின் குறுக்கீடு காரணமாக இலங்கை அணி தோல்வியில் இருந்து தப்பி பிழைத்துள்ளது. ஏற்கனவே இடம்பெற்ற இரண்டு ஒரு நாள் போட்டிகளிலும் படுதோல்வியை சந்தித்த இலங்கை அணி இன்று இடம் பெற்ற ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய நிலையில் 41.1 ஓவரில் சகல விக்கட்டுகளையும் இழந்து 166 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது.
தசுன் ஷானக 48 ஓட்டங்களையும் வணிண்டு ஹசரங்க 20 ஓட்ங்களையும் பெற்றுக்கொண்டார்கள். இந்த நிலையில் 167 ஓட்டங்கள் இலகுவான இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி துடுப்பெடுத்தாட இருந்த நிலையில் மழையின் குறுக்கீடு காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டது.
இங்கிலாந்து சென்ற இலங்கை அணி ஏற்கனவே 20 ஓவர் ஆட்டத்தில் தொடரை 3-0 என்றநிலையில் இழந்த நிலையில் தற்பொழுது ஒருநாள் தொடரையும் 2-0 என்ற நிலையில் இழந்து உள்ளது குறிப்பிடத்தக்கது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்