Sat. Apr 27th, 2024

கோண்டாவில் தாக்குதல் சூத்திரதரிகள் மூவர் கைது

கோண்டாவில் பகுதியில் நடைபெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது. இத்துடன் மூன்று வாள்களும் மீட்கப்பட்டுள்ளன என்று தெரியவருகிறது.

 கோண்டாவில் பகுதியில் கடந்த 30ஆம் திகதி வீடியோ ஒளிப்பதிவு செய்யும் இடத்திற்குள் புகுந்த  குழுவொன்று தாக்குதல் நடத்தியதில் 8 பேர் வாள்வெட்டுக்கு இலக்காகியதுடன் ஆட்டோ வாகனங்களுக்கு சேதப்படுத்தியதோடு ஒளிப்பதிவு கலையகத்தினையும் தீ மூட்டி கொளுத்தியசம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த சம்பவத்தில் ஒருவரின் கை வெட்டித் துண்டாப்பட்டிருந்தது.

குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் யாழ் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் , மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டுதலின் கீழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பிரான்சிஸ் தலைமையிலான பொலீஸ் அணி பிரதான சந்தேகநபர்கள் மூவரை கைது செய்துள்ளதோடு கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 3 கஜேந்திரா வாள்களும் குறித்த சம்பவத்திற்கு பாவிக்கப்பட்ட மோட்டார் சைக்கிளும் முச்சக்கர வண்டியையும் ம கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் படி 14 பேர் கொண்ட அணியினர் 5 மோட்டார் சைக்கிளில் சென்று குறித்த சம்பவத்தை மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்

சம்பவத்துடன் தொடர்புடையோர் நால்வர் தெல்லிப்பளை பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் இருவர் பொம்மை வெளி பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவருகிறது.

 மேலும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்கள் மிக விரைவில் கைது செய்யப்பட உள்ளதாகவும் குறித்த சந்தேக நபர்களை மறைத்து வைத்திருந்துஉதவி புரிவோருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி நிகால் பிரான்சிஸ் தெரிவித்தார்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்