Sat. May 4th, 2024

மன்னார் பிரிமீயர் லீக்’  சுற்றுப் போட்டி -9 ஆம் நாள் சுற்றில்  பீனிக்ஸ்   கழகம் வெற்றி.

மன்னார் மாவட்ட உதைப்பந்தாட்ட சம்மேளனத்தினால்  ஏற்பாடு செய்யப்பட்ட மன்னார் பிரிமீயர் லீக் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் 9 ஆம் நாள் போட்டிகள் நேற்று செவ்வாய்க்கிழமை (25)  இரவு 7.30 மணியளவில் மின் ஒளியில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.
‘மன்னார் பிரிமீயர் லீக்’ தலைவரும், இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவரும்,மன்னார் நகர முதல்வருமான ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தலைமையில்  குறித்த நிகழ்வு இடம் பெற்றது.
குறித்த உதைபந்தாட்ட போட்டியானது  மன்னார் பீனிக்ஸ் உதை பந்தாட்ட கழகத்திற்கும் மன்னார்   மாட்டிஸ் உதை பந்தாட்ட கழகத்திற்கும் இடையில் இடம் பெற்றது.
-இதன் போது 6 ஆவது நிமிடத்தில் மன்னார் பீனிக்ஸ் உதை பந்தாட்ட வீரர் ஜே.அல்பிரட் முதலாவது கோலை அடித்தார் அதனைத்தொடர்ந்து 21 ஆவது நிமிடத்தில் ஏ.நிரஞ்சன் ஒரு கோலை அடித்தார். அதனைத்தொடர்ந்து 28 ஆவது நிமிடத்தில் எஸ்.றைசன் ஒரு கொலை அடித்தார்.
-அதனைத்தொடர்ந்து மன்னார் மாட்டிஸ்  உதை பந்தாட்ட கழக வீரர் ஏ.றிக்சிகேசன் 77 ஆவது நிமிடத்தில் ஒரு கோலையும்,ஏ.சாள்ஸ் 88 ஆவது நிமிடத்தில் ஒரு கோலையும் அடித்தனர்.
-இந்த நிலையில் மன்னார் பீனிக்ஸ் உதை பந்தாட்ட கழகம் 3:2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்