மந்துவில் சுகாதார பரிசோதகர்களின் திடீர் நடவடிக்கை
தென்மராட்சி பகுதியில் மனித பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்கள் அழிக்கப்பட்டதோடு குறித்த நிறுவன உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளது.
மந்துவில் பொது சுகாதார பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொதுசுகாதார பரிசோதர் ஆ.ஜென்சன் றொனால்ட் தலைமையில் சாவகச்சேரி சுகாதாரவைத்திய அதிகாரி பிரிவு பொதுசுகாதார பரிசோதகர்கள் குழுவாக இணைந்து உணவுச்சுகாதார பரிசோதனைகளை நேற்று சனிக்கிழமை மேற்கொண்டனர்.
இதன்போது பலசரக்கு கடைகள், ஹோட்டல்கள், சந்தைகள் மற்றும் மருந்தகங்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்ட மனித பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டதோடு தொடர்ந்து உணவுச் சுகாதார மேம்பாட்டைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.