Mon. Apr 29th, 2024

மட்டுவில் தெற்கு வளர்மதி முன்பள்ளியின் சிறுவர் பூங்கா திறப்பு விழாவும் கால்கோள் விழாவும்

மட்டுவில் தெற்கு வளர்மதி முன்பள்ளியின் சிறுவர் பூங்கா திறப்பு விழாவும் கால்கோள் விழாவும் கலைவிழாவும் 22/2/2020 சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு மட்டுவில் தெற்கு வளர்மதி கல்விக் கழக அரங்கில் நடைபெற்றது

சனசமூக நிலைய தலைவர் சி.டினேசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்
ஈ சரவணபவன் சிறப்பு விருந்தினராக சாவகச்சேரி பிரதேச சபை தவிசாளர் க வாமதேவன் கௌரவ விருந்தினர்களாக அகில இலங்கை சமாதான நீதிவானும் பாராளுமன்ற ஆராய்ச்சி உத்தியோகத்தருமான செ.பிரதாப் சாவகச்சேரி பிரதேச சபை தொழில்நுட்ப உத்தியோகத்தர் க.சுபாஸ்கரன் இனிய விருந்தினராக கனடாக்கிளை கல்விக் கழக இணைப்பாளர் பொன்.கந்தையா வலிகாமம் வலயக்கல்வி பிரதிக்கல்விப் பணிப்பாளரும் நிலையத்தின் செயலாளருமான சி.மதியழகன் முன்பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சிறுவர் பூங்காவில் விருந்தினர்களால்  மரநடுகை நிகழ்வும் இடம் பெற்றது

முன்பள்ளி புகுமுக மாணவர்கள் பாடசாலைக்கு சென்ற மாணவர்கள்
முன்பள்ளி ஆசிரியர்கள்  மாலை அணிவித்து பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்

முன்பள்ளி மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம் பெற்றன

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்