Fri. Mar 29th, 2024

யாழ் பல்கலைக் கழகம் நடாத்தும் கிரிக்கெட் தொடரில்  ஓல்கோல்ட்ஸ் அணி சம்பியன்

யாழ் பல்கலைக் கழகம் நடாத்தும் அழைக்கப்பட்ட கழகங்களுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில்

ஓல்கோல்ட்ஸ் அணி சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றினர்.
இதன் இறுதியாட்டம் கடந்த வெள்ளிக்கிழமை யாழ் பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்றது.
இறுதியாட்டத்தில் ஓல்கோல்ட்ஸ் அணியை எதிர்த்து சென்றலைஸ் அணி மோதியது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஓல்கோல்ட்ஸ் அணி களத்தடுப்பை தீர்மானித்தது. இதனால் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்றலைஸ் அணி 48.4 பந்துப் பரிமாற்றங்களில் சகல இலக்குகளையும் இழந்து 185 ஓட்டங்களைப் பெற்றனர்.
அவ்வணி சார்பில் அலன்ராஜ் 47, பிரியலக்ஸன் 30, சுபாஸ்கர் 26 ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்துவீச்சில் ஓல்கோல்ட்ஸ் அணி சார்பில் சிந்துஜன், ஜிந்துசன், நிரோஜன், திலீபன் ஆகியோர் இரு இலக்குகளையும்,  பிரியலக்ஸன் ஒரு இலக்கையும் கைப்பற்றினார்.
186 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஓல்கோல்ட்ஸ் அணி 34.5 பந்துப் பரிமாற்றங்களில் சகல இலக்குகளையும் இழந்து 143 ஓட்டங்களை மாத்திரம் பெற  43 ஓட்டங்களால் சென்றலைஸ் அணி வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றினர்.
ஓல்கோல்ட்ஸ் அணி சார்பில் மதுசன் 41, பிரியலக்ஸன் 37, ஸ்ரீகுகன் 26 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்து வீச்சில் சென்றலைஸ் அணி சார்பில் அலன்ராஜ் 5, எரிக் 3, ஜேம்ஸ் மற்றும் தேவன் ஆகியோர் ஒவ்வொரு இலக்குகளையும் கைப்பற்றினர்.
ஆட்ட நாயகனாக, சிறந்த பந்து வீச்சாளர் மற்றும் சிறந்த துடுப்பாட்ட வீரராக சென்றலைஸ் அணி வீரர் அலன்ராஜ், தொடர் ஆட்ட நாயகனாக ஓல்கோல்ட்ஸ் அணி வீரர் பிரியலக்ஸன், சிறந்த களத் தடுப்பாளராக ஓல்கோல்ட்ஸ் அணி வீரர் ஜிந்துசன் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர். இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக வடக்கு மாகாண கூட்டுறவு ஆணைக்குழு நிதி உதவியாளர் என்.சுதேஸ்குமார் கலந்து கொண்டார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்